Monday, April 13, 2009

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்....PART 1.

" வளர்ந்த கதை மறந்து விட்டால் கேளடா கண்னா!
மறைத்து வைத்த ஓவியத்தை பாரடா கண்னா


'ஓதுக'
உம் இறைவன்
திருபெயரால்
:

இளையாங்குடி கல்லூரி கழக அறிக்கை. 1970

படித்து பல‌ அறியாத உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து
வ‌ர‌வு செலவு க‌ண‌க்கு
CLICK> பக்கம் 6
க‌ல்லூரி க‌ழக‌ அர‌ம்ப‌ கால‌ அங்க‌த்தின‌ர்க‌ள்
CLICK> பக்கம் 7

CLICK> பக்கம் 8

CLICK> பக்கம் 9

CLICK> பக்கம் 10

CLICK> பக்கம் 11

CLICK> பக்கம் 12

CLICK> பக்கம் 13

க‌ல்லூரிக்கு நில‌ம் வாங்க‌ ப‌ண‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள்.
CLICK> பக்கம் 15

CLICK> பக்கம் 16
க‌ல்லூரிக்கு நில‌ம் தான‌ம் செய்த‌வ்ர்க‌ள்
CLICK> பக்கம் 17

க‌ல்லூரிக்கு நில‌ம் விற்ற‌வ‌ர்க‌ள்
CLICK> பக்கம் 18

க‌ல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.
CLICK> பக்கம் 19


மேலே கண்ட அறிக்கையில் சிகப்பு மையால் கோடிட்ட வாக்கியத்தின்படி, 1969ல் இளையான்குடி வந்து,

இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தும் ,

அச்சமயம் அதை நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,

பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,

விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில்,

தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து

அச்சமயம் சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, இளையான்குடி‍‍-பரமக்குடி ரஸ்தாவில் மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்து
ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக இனாமாக கொடுத்த இடத்தில் அடிக்கல் நாட்டி,

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌(FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,

அந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌ யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து,

1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,

அல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.

இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர், பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து,

ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடங்கி செயல் பட செய்தார்கள்..

*************************

4 comments:

Anonymous said...

இளையாங்குடியின் வெளிச்சம் இணைய தள நிர்வாகஸ்தகர்களே,

Nidur info என்ற இணைய தளத்தின்

"தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள் - பட்டியல்" ‍ என்ற பக்கத்தில்:‍

“ டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி
கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது ”. என்று குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கிற‌தே ? ? ?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி அவ‌ர்க‌ளின் பெயரை ம‌ட்டும் அவர் கல்லூரி உருவாக்கத்தின் அச்சாணி என்ப‌தால் தானே அவர் ஒருவ‌ர் பெய‌ர் கூற‌ப்ப‌டுகிற‌து?

அவ்விணைய தளபக்க முகவரி:

http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=133:2008-08-24-14-32-59&catid=63:2008-08-24-03-00-04&Itemid=99


உண்மை அப்படியிருக்க நீங்க‌ள் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ள்.

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி அவ‌ர்க‌ளின் பெயர் 19 ப‌க்க‌ங்கள் அறிக்கைகளில் எங்கே?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி இளையாங்குடி கல்லூரி கழகத்தின் ஸ்தாபகரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி ரூபாய் 11.00 செலுத்திய மெம்பரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி கல்லூரிக்கு நிலம் தானம் செய்தவரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி கல்லூரிக்கு தன் நிலத்தை விற்ற‌வரா?

நான் ஒரு முட்டாளுங்கோவ். எனக்கு உண்மை தெரிய வேனுங்கோவ்.

ILAYANGUDI CITIZEN.

Anonymous said...

டாக்ட‌ர் சாகிர் உசேன் கல்லூரி வெள்ளி விழா ம‌ல‌ரில்,

"க‌ல்லூரி வ‌ர‌லாற்றின் க‌வின்மிகு நாட்க‌ள்! "
என்ற‌ த‌லைப்பில்

"1970 மறைந்த வள்ளல் ஹாஜி வி.எம். ஜனாப் வி.எம்.பீர். முஹம்மது நன்கொடையில் கல்லூரியின் முதல் கட்டிடம் உருவாகிறது. மறைந்த வள்ளல் எம்.எஸ் முஹம்மது உசேன் நன்கொடையில் அக்கட்டிடம் நிறைவு பெறுகிறது."

என்று உண்மைக்கு புறம்பாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

இது உங்க‌ளுக்கு தெரியுமா?

நில‌ம்,பத்திர பதிவு செல‌வு, கல்லூரி தொடங்கி செயல்பட முழுமையான‌ க‌ட்டிட‌ம் அனைத்துக்கும் உழைப்புடன் தன் சுய‌ பொருள் செல‌விட்ட‌வ‌ர்
வாஞ்சூர் பீர் முஹ‌ம்ம‌து என்ப‌து ப‌ரிபூர‌ண‌ உண்மை என்பதை எப்படி எபடியெல்லாம் திரிக்கப்படுகிறது.!!!

எந்த செய்தியையும் திரித்து ப‌ல‌ முறை திரும்ப‌ திரும்ப கூறி உண்மையாக்குவ‌தில் வல்ல‌வ‌ர்க‌ள் முழுக்க முழுக்க அமெரிக்க‌ர்களா? கொஞ்சம் கொஞசம் இளையாங்குடியர்களா?.

எங்கே உங‌க‌ள் புல‌னாய்வை தட்டி விடுங்க‌ளேன். பதில் கூறுங்களேன்.

புதுக்குளத்தான்.

ilayangudi may know said...

T.R.S. endru ilayangudi ill alaikkappadum iron business-iy ilayangudi yil thoodangiyavarum,I.M.P.T.pallivasal ex.trusty markum.T.R.SICKANDER avarkal kallurikku thanamaga nilam koduthullargal.

Anonymous said...

க‌ல்லூரி க‌ழகத்திடமிருந்து ஆரம்ப முதலாக‌ தன் உழைப்புக்கு ஊதியம் பெற்றுக்கொண்டும் (க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து பக்க‌ம் 3 )

கல்லூரி கழக பொருளாதாரத்திலேயே வெளிநாடு உள்நாட்டு பயணங்கள் , விருந்துபசரிப்புகள் அனுபவித்து கல்லூரிக்காக வசூல் செய்தவர்கள் மட்டுமே கல்லூரியின் ஸ்தாபகர்கள் என நிலைபெற செய்வது ஏன்?

இளையாங்குடியர்கள் உணரும் காலம் எப்பொழுது?

அக்பர் ஆலம்.

Post a Comment