Thursday, April 16, 2009

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART 2

அன்புச்சகோதரர் புதுகுளத்தான் அவர்களே!

விமர்சனத்திற்கு நன்றி..

"க‌ல்லூரி வ‌ர‌லாற்றின் க‌வின்மிகு நாட்க‌ள்! " என்ற‌ த‌லைப்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வெள்ளி விழா ம‌ல‌ரில்,

தாங்கள் குறிப்பிட்டபடி வெளிவந்து உள்ளது என்பதை, 1997 ல் வெளி வந்த வெள்ளி விழா ம‌ல‌ரில்,எங்கள் குழு படித்து, வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.

இது மட்டுமல்ல‌ இன்னும் ' நிறைய' தவறுகள் உள்ளன..இவைகள் யாவும் நிச்சயமாக திருத்தப்பட வேன்டியவையாகும்..

இது சின்னப்புத்திக்காரர்களின் சின்ன சின்ன ஆசை..

அற்ப சந்தோசத்திற்கு அலைந்து, தை யா த க் கா என்று ஆடியிருப்பார்கள்.. உண்மையை அவன் (அல்லாஹ்), 'கவின் மிகு நாட்களில்' (ஹியாமத் நாட்களில்) 'விழா' அறிவிப்பான். ஆமீன்.ஆமீன்.யாரப்பில் ஆலமின்....

சந்தோசப்படுங்கள்!

நல்லவேளை 1997ல், வாஞ்சூர்பீர்முகமதும்,எம்.எஸ்.முஹமது உசேனும் உயிருடன் இல்லை, இப்போது தான் தெரிய வருகிற்து இதே சின்னப் புத்திக்காரர்களின் கைங்கரியத்தில் தானோ, என்னவோ முதல் ப‌ஞ்சாயத்து போர்டு தேர்தலில் இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து ரசித்த மனம், இன்றும் ஆவலுடன் அலைகிறார்கள்..

முக்கியமாக, இருவரும் வீன் பெருமைக்கும், புகழ்ச்சிகளுக்கும் ஆசைப்பட்டவர்களில்லை, இருவருமே அமைதியான‌வர்கள், ஆரோக்கியமான சிந்தனை உடையவர்கள், இருவருக்குமே ஒரே தொழில்(தோல் பேக் செய்தல்) கூட, ஒரு சில கல் மனம் கொன்ட கயவர்களின் வேலைகள், இப்படி தான் தோன்றிதனமாய், அறிவு ஆறாக‌, தம்மைப்பற்றி நினைத்துக் கொன்டு எழுதுபவர்களை, அதுவும் அவ்விருவரும் உயிரோடு இல்லாத போதிலும் எழுதுபவர்களை? உன்னிடமே விட்டு விடுகிறோம் அல்லாவே!

இம் மலரில் நிறைய தவறுகளும். உண்மை ம‌றைக்கப்பட்டும் உள்ளதை நாம் அறிவோம்..இவையெல்லாம் ஒவ்வொன்றாக < வெளிச்சத்திற்கு > கொன்டு வரப்படும்..
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை...........
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை......."
***********************

0 comments:

Post a Comment